சுவிட்சர்லாந்தில் ரயிலில் மோதிய நபர் உயிரிழப்பு
சுவிட்சர்லாந்தின் பெர்ன் (Bern) மாகாணத்தில் உள்ள Burgdorf ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற துயர சம்பவத்தில் ஒரு நபர் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
ஆரம்ப தகவல்களின் படி பலர் கொண்ட குழு ஒன்று தளத்தில் நின்றுகொண்டிருந்தபோது அதில் இருந்த ஒருவர் திடீரென தடத்தில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் உடனடியாக அவசர நிறுத்தம் செய்தபோதிலும் அந்த நபர் கடுமையாக காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் விபத்தா அல்லது வேறு யாராவது தொடர்புடைய குற்றச்செயலா என்பது இன்னும் தெளிவாகவில்லை என பெர்ன் கான்டன் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ நேரத்தில் அந்த நபருடன் இருந்த குழுவை சேர்ந்த பலரை போலீசார் தற்காலிகமாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படை மருத்துவ அவசர சேவை ரயில்வே அதிகாரிகள் மற்றும் நீதிமருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட பல குழுக்கள் அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.













Leave a Reply