Family Reunification, ஆஸ்திரிய பாராளுமன்றம் புதிய “Asylum & Migration Pact Adaptation Act (AMPAG)” சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இந்த புதிய சட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய குடியேற்ற மற்றும் அகதி ஒப்பந்த விதிகளை ஆஸ்திரியாவில் நடைமுறைப்படுத்தும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின் முக்கியமான மாற்றமாக அகதிகளின் குடும்ப இணைப்பு Family Reunification விண்ணப்பங்களுக்கு வருடாந்திர வரம்பு (Quota) அறிமுகப்படுத்தப்படுகிறது. 2026 ஜூலை 1 முதல் குடும்ப இணைப்பு விசாக்கள் அரசாங்கம் நிர்ணயிக்கும் எண்ணிக்கைக்குள் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணமாக ஆஸ்திரியாவின் சமூக சேவைகள் வீட்டு வசதி கல்வி மற்றும் சுகாதார அமைப்புகள் அதிக அழுத்தத்தை சந்திப்பதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.
மேலும் எல்லை மற்றும் விமான நிலைய அகதி நடைமுறைகளும் கடுமையாக்கப்படுகின்றன..
- அகதி விண்ணப்பதாரர்களுக்கு 7 நாள் ஆரம்ப Screening நடைமுறை
- அடையாளம், பாதுகாப்பு மற்றும் உடல்நிலை பரிசோதனைகள்
- விமான நிலையங்களில் நீண்டகால தடுத்து வைக்கும் நடைமுறை
- விரைவான Border Procedure
- விரைவான Deportation நடைமுறைகள்
போன்றவை அமல்படுத்தப்பட உள்ளன.
இந்த சட்டத்திற்கு எதிராக மனித உரிமை அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. குறிப்பாக குடும்ப இணைப்பை கட்டுப்படுத்துவது ஐரோப்பிய மனித உரிமைச் சட்டத்திற்கும் சர்வதேச அகதி பாதுகாப்பு விதிகளுக்கும் முரணாக இருக்கலாம் என விமர்சிக்கப்பட்டுள்ளது.





Leave a Reply