இந்தியாவில் வெப்பநிலை 46°C வரை உயர்வு Meta Description, இந்தியாவின் Telangana மாநிலத்தில் கடுமையான வெப்ப அலை (Heatwave) காரணமாக குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநிலத்தின் பல மாவட்டங்களில் வெப்பநிலை 45°C ஐ தாண்டியுள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
அதிகமாக வெளிப்புற வேலைகளில் ஈடுபட்ட தொழிலாளர்கள் முதியவர்கள் மற்றும் வீடற்றோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக வாரங்கல், கரீம்நகர், நிஜாமாபாத் உள்ளிட்ட பகுதிகளில் பல உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
இந்த நிலையை தொடர்ந்து தெலங்கானா அரசு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ₹4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும் மக்கள் மதிய நேரங்களில் வெளியே செல்லாமல் இருக்கவும் அதிக தண்ணீர் குடிக்கவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வானிலை மையம் வெளியிட்ட தகவலின்படி அடுத்த சில நாட்களும் கடும் வெப்பம் தொடரும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





Leave a Reply