Fraud Arrest, தென் மாகாண சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ரூ.16.5 மில்லியன் பெறுமதியான கொள்முதல் முறைகேடு தொடர்பான விசாரணையின் கீழ் தென் மாகாணத்தின் முன்னாள் பிரதம செயலாளர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.
2019ஆம் ஆண்டு தென் மாகாண அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட திட்டம் ஒன்றின் போது அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட கொள்முதல் நடைமுறைகளை மீறி ரூ.16.5 மில்லியன் பெறுமதியான நாற்காலிகள் கொள்வனவு செய்யப்பட்டதாக விசாரணைகளில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திற்கு முறையற்ற நன்மை கிடைக்கச் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.Fraud Arrest
விசாரணைகளின்படி பொதுநல அமைப்புகளுக்கு வழங்கப்பட வேண்டிய 16,361 நாற்காலிகள் தென் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 54 மாகாண சபை உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் இதன் மூலம் அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக முன்னதாக தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவும் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் அதே விசாரணையின் தொடர்ச்சியாக முன்னாள் பிரதம செயலாளர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்குப் பின்னர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.













Leave a Reply