இலங்கை பிரதமர் Harini Amarasuriya தனது உத்தியோகபூர்வ பிரித்தானியா பயணத்தின் போது பிரித்தானியாவின் கல்வி செயலாளரான Bridget Phillipson உடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். லண்டனில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இலங்கை மற்றும் பிரித்தானியா இடையிலான நீண்டகால கல்வி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது உயர்கல்வித் தரத்தை மேம்படுத்துவது மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கான புதிய வாய்ப்புகளை விரிவுபடுத்துவது போன்ற விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
குறிப்பாக கல்வி துறையில் தர உறுதிப்பாடு ஆராய்ச்சி ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச கல்வி கூட்டாண்மைகளை விரிவாக்குவது தொடர்பாக இரு தரப்பும் கருத்துகளை பரிமாறிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் இலங்கை உயர்ஸ்தானிகரக அதிகாரிகளும் கலந்துகொண்டனர். மேலும், கல்வி மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவதன் அவசியத்தையும் இரு தரப்பும் வலியுறுத்தியதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன





Leave a Reply