போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் கடத்தல்காரர் ஒருவரை கைது செய்வதற்காக காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
குறித்த சந்தேகநபர் நீண்ட காலமாக தலைமறைவாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தெவிநுவர பகுதியைச் சேர்ந்த லோஸ் பட பெதிகே சந்துன் வெலான் என்ற இளைஞனே இவ்வாறு காவல்துறையினரால் தேடப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், சந்தேகநபரை அடையாளம் காண உதவும் வகையில் அவரது புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
மேலும், வெளியிடப்பட்ட புகைப்படத்தில் உள்ள நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால், காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவின் 071 859 1876 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது என காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!
WhatsApp / Call: +94 76 572 9042













Leave a Reply