ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மனோஜ் சுரங்கா என்ற நபர் “பட்டுவத்தே சாமர” என்ற பெயரால் அறியப்படும் இவர் அசர்பைஜானில் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று இரவு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த மே 7 ஆம் தேதி இலங்கையில் இருந்து விசேட நடவடிக்கைக்காக புறப்பட்டிருந்த இலங்கை பொலிஸ் குழுவொன்று இந்தியா வழியாக அவரை பாதுகாப்புடன் நாட்டிற்கு அழைத்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்ற உலகத்துடன் தொடர்புடைய பல விசாரணைகளில் இவரின் பெயர் வெளியாகியிருந்த நிலையில் தற்போது மேலதிக விசாரணைகளை இலங்கை பாதுகாப்பு பிரிவுகள் முன்னெடுத்து வருகின்றன. இந்த கைது மற்றும் நாடு கடத்தல் நடவடிக்கை சர்வதேச ஒத்துழைப்பின் மூலம் முன்னெடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.





Leave a Reply