பிரான்ஸின் தபால் மற்றும் வங்கி சேவைகள் வழங்கும் லா போஸ்ட் (La Poste) நிறுவனத்தின் இணைய சேவைகள் மீது ஒரே வாரத்திற்குள் இரண்டாவது முறையாக பெரிய சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது.

வியாழக்கிழமை, ஜனவரி 1 அன்று அதிகாலை 3.30 மணி முதல் மாலை 5 மணி வரை பார்சல் டிராக்கிங், Digiposte டிஜிட்டல் சேஃப் மற்றும் La Banque Postale மொபைல் ஆப் உள்ளிட்ட பல ஆன்லைன் சேவைகள் செயலிழந்தன. இந்த தாக்குதல், முன்னெப்போதும் இல்லாத அளவிலான DDoS (Denial of Service) தாக்குதல் என லா போஸ்ட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஒரு விநாடிக்கு பல பில்லியன் இணைப்பு முயற்சிகள் சர்வர்களை நோக்கி அனுப்பப்பட்டதால் சேவைகள் முடக்கப்பட்டன.

இது கடந்த டிசம்பர் 22 மற்றும் கிறிஸ்துமஸ் காலத்தில் நடந்த தாக்குதல்களுடன் ஒத்ததாகும். தகவல் திருட்டு எதுவும் நிகழவில்லை எனவும் நாள் முடிவில் அனைத்து சேவைகளும் மீண்டும் இயங்கத் தொடங்கியதாகவும் லா போஸ்ட் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாரிஸ் அரசு வழக்கறிஞர் அலுவலகம் விசாரணை தொடங்கி, DGSI மற்றும் தேசிய சைபர் பிரிவுக்கு வழக்கை ஒப்படைத்துள்ளது.

Leave a Reply

Contact NS (Nerikkalam.Info)

வணக்கம்
உங்களுடைய அவசர தேவை கருதி நீங்கள் நிரோஷ் சந்துருவை தொடர்புகொள்ள விரும்புகிறீர்கள்,

Nirosh_Santhuru

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading