வெளிநாட்டு தொழிலாளர்கள், வெளிநாடுகளில் பணியாற்றி இலங்கை திரும்பும் தொழிலாளர்கள் தங்கள் சேமிப்பைப் பயன்படுத்தி தொழில் மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளை ஆரம்பிக்க வசதியாக தற்போது பயன்படுத்தப்படாமல் உள்ள அரச நிலங்களை ஒதுக்கும் திட்டத்தை உருவாக்குமாறு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்த அறிவுறுத்தல் 2026 மற்றும் 2027 ஆண்டுகளுக்கான தோட்டங்கள் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற ஆய்வுக் கூட்டத்தின் போது ஜனாதிபதி செயலகத்தில் வழங்கப்பட்டது. நில ஒதுக்கீட்டுடன் தேவையான திட்ட ஆதரவு சேவைகளையும் வழங்கும் வகையில் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், தோட்டத்துறை தேயிலை தென்னை ரப்பர் முந்திரி பனை அபிவிருத்தி சிறுதோட்ட மீள்நடுகை 10,000 வீடுகள் நிர்மாணத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் முன்னேற்றமும் இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. வெளிநாட்டு நிதியுதவியுடன் நடைபெறும் திட்டங்களில் தாமதம் ஏற்படாமல் நடவடிக்கை எடுக்கவும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த நடவடிக்கை வெளிநாட்டில் பணிபுரிந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் தங்கள் அனுபவம் மற்றும் முதலீட்டை உள்நாட்டு பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படுத்த உதவும் புதிய முயற்சியாகக் கருதப்படுகிறது.













Leave a Reply